செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) என்பது இன்று உலகம் முழுவதும் தொழில்துறை, கல்வி, வணிகம் மற்றும் பல துறைகளை மாற்றியமைக்கும் திறனை கொண்ட ஒரு முக்கிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. “AI” என்பது ஒரு கணினி அல்லது மென்பொருள், மனிதன் போன்று சிந்திக்கவும், கற்றுக்கொள்ளவும், முடிவெடுக்கவும், பிரச்சனைகளை தீர்க்கவும் செய்யும் திறனை அடையும் முறையை குறிக்கிறது.
AI என்றால் என்ன?
Artificial Intelligence என்பது கணினி அமைப்புகள்(Computer Systems) மற்றும் மென்பொருள்களுக்கு (softwares), மனிதனின் நுண்ணறிவு போன்ற திறன்களை வழங்கும் ஒரு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கிளை ஆகும்.
சுருங்க சொன்னால் “செயற்கை நுண்ணறிவு என்பது மனிதன் போல சிந்திக்கக்கூடிய மெஷின்.”
அதாவது கணினி கற்றுக்கொள்ளும், முடிவெடுக்கும், பேசும், எழுதும், ஓவியம் வரைக்கும்… எல்லாம் செய்யக்கூடியது.
