வியட்நாமின் வின்குரூப் நிறுவனம் தமிழகத்தில் தனது முதலீடுகளை விரிவுபடுத்துகிறது. ஏற்கனவே தூத்துக்குடியில் வின்பாஸ்ட் (VinFast) தொழிற்சாலை மூலம் மின்சார வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது மேலும் மூன்று முக்கிய துறைகளில் முதலீடு செய்ய தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு துறையில் ‘வின் வொண்டர்ஸ்’ (VinWonders) என்ற பெயரில் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்திலான தீம் பார்க் மற்றும் உயிரியல் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. இவை சென்னை அல்லது தூத்துக்குடிக்கு அருகில் அமைய வாய்ப்புள்ளது. அதேபோல், ‘வின் பேர்ல்’ (Vinpearl) என்ற பெயரில் ஐந்து நட்சத்திர சொகுசு விடுதிகளையும் அந்நிறுவனம் தமிழகத்தின் முக்கிய இடங்களில் கட்டவுள்ளது.
போக்குவரத்து துறையில் ‘GSM’ என்ற பெயரில் மின்சார டாக்ஸி சேவையைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சேவையில் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்ட மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்படும்.

இந்தத் திட்டங்களின் மூலம் சுமார் 12,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதுடன், மின்சார வாகனப் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். ஏற்கனவே உள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஆண்டுக்கு 1.5 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.






Leave a Reply